'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சூரி. தற்போது புதிதாக ஓட்டல் ஒன்றை மதுரையில் திறக்க உள்ளார். பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்குவார்கள்.
சூரி, அவருடைய குடும்பத்தினருக்காக ஓட்டல் திறக்க உள்ளாராம். மதுரையில் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். அவரது நெருங்கிய உறவினர்களின் குழந்தைகள் பலரையும் சூரி தான் படிக்க வைத்து வருகிறார்.
சூரி நாளை மதுரையில் ஆரம்பிக்க உள்ள ஓட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைக்க உள்ளார். சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்' ஆகிய படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. சூரி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்காக மதுரைக்கு வந்து ஓட்டலைத் திறந்து வைக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.