17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி |
நடிகர் காளி வெங்கட், சென்னையை சேர்ந்த ஜனனி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தெகிடி, முண்டாசுபட்டி, இறுதிச்சுற்று, ராஜா மந்திரி, மாரி உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் காளி வெங்கட். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
நடிப்பில் பிஸியாக இருந்த காளி வெங்கட், இப்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். காளி வெங்கட்டிற்கும், சென்னையை சேர்ந்த முத்துச்சாமி - சாந்தி தம்பதியரின் மகள் ஜனனிக்கும், இன்று(அக்., 30) காலை திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.