டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நிலவேம்பு கஷாயம் விஷயத்தில் கருத்து பதிவிட்ட கமல் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என காவல் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தலை தூக்கி உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நிலவேம்பு கஷாயத்தை தமிழக அரசே பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நிலவேம்பு கஷாயத்தால் சில பின் விளைவுகள் ஏற்படுவதாக தகவல் வெளியாக, ஆய்வு முடிவுகள் வரும் வரை நிலவேம்பு கஷாயத்தை வழங்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் கமல்.
நிலவேம்பு தொடர்பாக கமல், பொய்யான தகவலை, மக்களுக்கு அச்சுறுத்தும் விதத்தில் பரப்பி வருகின்றார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவராஜன் என்பவர் சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கமல் மீது வழக்கு பதிவு செய்யலாமா என தமிழக காவல் துறை ஆலோசனை நடத்தியது. ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட மாட்டாது என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.