ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் வடிவேலு. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனால், அதிமுக ஆட்சியைப் பிடித்ததும் அவருக்கு வாய்ப்பு தரப் பலர் தயங்கினார். அவரும் அதை மறைக்க நடித்தால் நாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்க ஆரம்பித்தார். அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'தெனாலிராமன், எலி' ஆகிய படங்கள் படுதோல்வியடைந்தன.
மீண்டும் நகைச்சுவை நடிப்பிற்குத் திரும்பி, 'கத்திச் சண்டை, சிவலிங்கா, மெர்சல்' ஆகிய படங்களில் நடித்தார். இருந்தாலும் இந்தப் படங்களில் பழைய வடிவேலுவைப் பார்க்க முடியவில்லை. இதனிடையே, வடிவேலு நாயகனாக நடிக்க 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகமான 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தைத் தயாரிக்கும் முடிவுக்கு வந்தார் இயக்குனர் ஷங்கர். கடந்த சில வருடங்களாக படத் தயாரிப்பை விட்டிருந்தவர், இயக்குனர் சிம்புதேவன் சொன்ன கதையை நம்பி களத்தில் இறங்கினார். அப்படி இறங்கியவரை தற்போது நட்டாற்றி தவிக்க வைத்து வருகிறார் வடிவேலு.
படம் ஆரம்பித்த நாட்களில் இருந்தே வடிவேலு படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வருவதில்லையம். படத்தின் பல காட்சிகளை மாற்றச் சொல்லி வம்பு செய்து கொண்டிருக்கிறாராம். இதனால் கடுமையாக வெறுப்படைந்த ஷங்கர், தற்போது படத்தைத் தயாரிக்கும் எண்ணத்தையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
வடிவேலுவுக்குக் கொடுத்த சம்பளத்தைத் திருப்பி வாங்கித் தருமாறு, தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. நகைச்சுவை அரசன் எனப் பெயரெடுத்தவர் இப்போது இம்சை அரசன் என பொருத்தமான பெயர் வாங்கிவிட்டாரே எனப் படக்குழுவினல் நக்கலடிக்கிறார்களாம்.