'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நகுல் திறமையான நடிகராக இருந்தாலும், அவரது நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தினால் கண்டு கொள்ளப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நகுல் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'செய்'.
விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்தின் சென்னை விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து 'பள்ளி பருவத்திலே' படத்தின் சென்னை, செங்கல்பட்டு விநியோக உரிமையையும் வாங்கியுள்ளது ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்.
வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள 'பள்ளி பருவத்திலே' படத்தில் இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக நடித்துள்ளார். 'பள்ளி பருவத்திலே' படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இப்போது பள்ளிப்பருவத்திலே படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டது.
இந்த சூழலில் தான் 'பள்ளி பருவத்திலே' படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜாஸ் சினிமா, சென்னை, செங்கல்பட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது. சசிகலாவின் குடும்ப நிறுவனம் என்று சொல்லப்படும் ஜாஸ் சினிமா, இதுவரை பெரிய பேனர், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை மட்டுமே வாங்கி வெளியிட்டு வந்தது.
தற்போது அரசியலில் காட்சிகள் மாறிவிட்டதால், இப்போது செய், பள்ளி பருவத்திலே போன்ற சிறிய படங்களையும் ஜாஸ் சினிமாஸ் வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது.