த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
நண்பன் படம் வெற்றியின் மூலம் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், எனது ரசிகர்கள் தான் எனது நண்பர்கள் என்று கூறியுள்ளார். இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தை விஜய், ஸ்ரீகாந்த, ஜீவா ஆகியோரை வைத்து நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் நண்பன் டீமே மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.
இந்நிலையில் நண்பன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவை வந்திருந்தார் நடிகர் விஜய். அப்போது ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த சுமார் 100பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், அங்கு படிக்கும் மாணவர்கள் இருவருக்கு லேப்டாப்பும் வழங்கினார். பின்பு அங்குள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றி நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், நண்பன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரசிகர்கள் தான். அவர்கள் தான் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி என்று கூறினார்.