சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க...? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி...!

Hansika angry with rumour of Prabhudeva-Nayanthara matter நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என்னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்குறாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோன்ற விஷயங்களை கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.

பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரபுதேவா-நயன்தாரா பிரிவுக்கு காரணம் ஹன்சிகா தான் என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, நீண்ட நேரத்திற்கு பின் சூடாக பேசத் தொடங்கினார். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும், நான் ரொம்ப ஸ்டைரட் பார்வர்ட். எதையும் தைரியமாக பேசிடுவேன். ஆனா, என்ன பத்தி பிரபுதேவா கூட பேசுறது ரொம்ப தப்பா படுது. அவர் எங்க வீட்டு பெரிய அண்ணன் மாதிரி. அவரை அண்ணா என்று தான் எப்போதும், எங்கிருந்தாலும் கூப்பிடுவேன். ஆனால் இப்போ இந்த மாதிரி செய்தியை கேட்கும் போது ரொம்பவே அசிங்கமா இருக்கு. எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங் பாரிஸ் நடந்த போது பிரபுதேவா கூட நயன்தாராவும் வந்திருந்தாங்க. அப்போது தான் அவரை பார்த்து சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். அதன் பிறகு பிரபுதேவா, நயன்தாரா யார்கிட்டேயும் நான் பேசல, அவங்கள பார்க்கல. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவிட்டதால, சூட்டிங்கில் பிஸியாகிவிட்டேன்.

நயன்தாரா-பிரபுதேவா இவர்களுக்குள் நடக்கிற கேட் வால் பிரச்னையில் என்னை ஏன் இழுக்குறாங்க...? என்று தெரியல. இப்படி செய்தியை கேட்கும்போதெல்லாம் ரொம்ப அசிங்கமா, கேவலமா, அருவெறுப்பா இருக்கு. என் இமேஜை கெடுக்க பாக்குறாங்க. இந்தமாதிரி வதந்தியை பரப்புறவுங்க வீட்டிலேயும் பெண்கள் இருப்பாங்க. கண்ணா பின்னான்னு எழுதி, யாருக்கோ நல்லது பண்றோம் என்கிற பேர்வழியில், எங்க வீட்டில் உள்ள ஒட்டு மொத்த நிம்மதியையும் கெடுத்துட்டாங்க. இதைப்பற்றி என் அம்மா, என் அண்ணன் என எல்லோரும் ரொம்ப பீல் பண்ணுனாங்க.

நான் லண்டனுல படிச்சவ என்றாலும், நம்ம நாட்டு கலாச்சாரத்தை நிறையவே பின்பற்றுபவள். எனக்குனு ஒரு லிமிட் இருக்கு. என் வேலை எனக்கு முக்கியம். நான் இன்னும் சினிமாவுல நிறைய சாதிக்க வேண்டியிருக்கு. இப்போ மும்பையில இருக்கேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் முடிஞ்சு, சிம்புவோட வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறேன். இதுபோன்ற செய்திகள் என்னை மட்டும் அல்லாமல் என்னோட வேலையையும் பாதிக்குது.

சரி இதுபற்றி பிரபுதேவாவுடன் பேசினீங்களா என்று கேட்டதும், இதுவரைக்கும் இல்ல, பொறுமையா இருக்கேன். இது எல்லாதுக்கும் கடவுளும், காலமும் பதில் சொல்லும். என்ன பத்தி அவதூறான செய்திக்கும், விமர்சனங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியாது என்று கொதித்து போய் பேசி முடித்தார் ஹன்சிகா.

Tags »
Hansika, angry, Prabhudeva, Nayanthara, split, matter, நயன்தாரா, பிரபுதேவா, விவகாரம், நயன்தாரா, கொதிப்பு,
Share  
Bookmark and Share

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Copyright © 2012 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in