ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மெர்சல்' படம் வெளிவந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. எதிர்பார்த்ததை விடவும், எழுந்த சர்ச்சைகளின் காரணமாக படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இன்றோ அல்லது நாளையோ 'எந்திரன்' படத்தின் தமிழ்நாட்டு வசூலை 'மெர்சல்' படம் முறியடித்து விடும் என்கிறார்கள்.
'எந்திரன்' படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 108 கோடியை வசூலித்துள்ளது. இந்தத் தொகையை 'மெர்சல்' கடந்தாலும் தமிழ்நாட்டு வசூலைப் பொறுத்தவரையில் தற்போதைக்கு இரண்டாவது இடத்தில்தான் இருக்கும். 'பாகுபலி 2' படம் சுமார் 120 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொகையையும் 'மெர்சல்' படம் முழுவதுமாக ஓடி முடிக்கும் போது கடந்து விடும் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் 'மெர்சல்' படத்தின் வசூல் விரைவில் 200 கோடியைக் கடந்துவிடும் என்றும் அவர்கள் மேலும் சொல்கிறார்கள்.