டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மண்வாசனை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரேவதி தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். 1990ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இரவில் ஒரு பகல் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பெண், ரேவதி, நிறங்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தார். சின்ன சின்ன ஆசை, பூம் பூம் சக்கலக்க, கதை கதையாம் காரணமாம், புதுமை பெண்கள், சிந்தனைகள், சேம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சில காலம் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கியிருந்த ரேவதி இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அழகு என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். ரேவதியின் கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்ப பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் அழகு என்ற கேரக்டரில் நடிக்கிறார் ரேவதி. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒஸ்தி, பவர் பாண்டி படங்களில் அம்மாவாக நடித்த ரேவதி தொடர்ந்து சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.