ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அவர், பாலிவுட் நடிகை நிஹாரிகாக தன்னை மயக்கி படுக்கைக்கு அழைத்தாக குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:
நானும் நடிகை நிஹாரிகா சிங்கும் மிஸ் லவ்லி என்ற படத்தில் சேர்ந்து நடித்தோம். ஒரு நாள் நிஹாரிகா சிங் என்னை அவருடையை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். நானும் அழைப்பை ஏற்று அவரது இல்லத்துக்கு சென்றேன். கதவை திறந்தபோது வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து என்னை வரவேற்றார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா மிகவும் அழகாக இருந்தார். விருந்து முடிந்ததும் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நானும் அதை ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். என்று எழுதியுள்ளார். நவாசுதீன் சித்திக்கிற்கு அஞ்சலி என்ற மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சித்திக்கின் இந்த தகவலுக்கு பதிலளித்து நிஹாரிகா கூறியிருப்பதாவது: மிஸ் லவ்லி படத்தில் நானும் நவாத்சுதீனும் இணைந்து நடித்தபோது எங்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் சில மாதங்கள் மட்டுமே அந்த தொடர்பு நீடித்தது. நான் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி அவரை படுக்கைக்கு அழைத்தேன் என்று கூறியிருப்பதை பார்த்து சிரித்துக்கொண்டேன். நவாஸுக்கு திருமணமான விஷயம் அப்போது எனக்கு தெரியாது. திருமணமானதை அவர் மறைத்து விட்டார். அவரது மனைவி கிராமத்தில் இருந்தார். அதனால்தான் என்னால் அவருக்கு திருமணம் ஆனதை கண்டுபிடிக்க முடியாமல் போனது. என்னை அவர் ஏமாற்றி விட்டார். என்று கூறியிருக்கிறார் நிஹாரிகா.