ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
ஒரு இந்தியப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் கொண்டு போய் நடத்தினால் அது உலகப் படமாகிவிடுமா என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் 2.0 படத்தின் இசை வெளியீட்டை இந்திய நகரங்களிலேயே நடத்தியிருக்கலாமே என்றும் பலர் சொல்கிறார்கள். ரசிகர்கள், பொதுமக்கள் பலர் கேட்கும் இந்த கேள்விகளுக்கு 2.0 படக் குழுவினர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
2.0 இசை வெளியீடு பற்றிய தகவல்கள் இன்றைய சமூக வலைத்தள உலகில் சரியான விதத்தில் பரிமாறப்படவில்லை. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாவதாகச் சொன்னார்கள். ஆனால், பல மணி நேர தாமதத்திற்குப் பிறகே இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. 2.0 படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்திலும் மிகக் குறைந்த அளவில் ஒரு சில தகவல் பரிமாற்றமே நடந்தது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான விழா, அதிகாலை 2 மணி அளவில் இசை வெளியீட்டு நிகழ்வுடன் முடிவுற்றதாகத் தெரிகிறது. விழா முடிவடைந்து 10 மணி நேரமாகியும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு பத்திரிகைச் செய்தியும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பல கோடி ரூபாய் செலவில் 7 நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு, 10000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங், பிரம்மாண்ட இசை விழா என அதிகாரப்பூர்வமாக 2.0 படத்தின் இசையை வெளியிட்டார்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே பல இணையதளங்களில் 2.0 படத்தின் பாடல்கள் லீக் ஆனதுதான் காமெடியின் உச்சகட்டம்.
அவ்வளவு செலவு செய்து உலகப் படம் என்று சொன்னவர்கள் இந்த இணையத் திருட்டை தடுத்து நிறுத்த சில லட்சங்களைக் கூட செலவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.