பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ஒய்.ஜி.பார்த்சாரதி நடத்திய அமெச்சூர் நாடக சபாவின் ஆஸ்தான ஹீரோயின். எல்லா நாடகங்களிலும் நடித்து வந்தார். அப்போது தாயாருடன் செல்லும் ஜெயலிதாவை சிறு சிறு வேடங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இதேபோல நடிகர் சோவும் தனது நாடக சபா சார்பில் ஆங்கில நாடகங்கள் போட்டுக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு அப்போது 13 அல்லது 14 வயதிருக்கும். அப்போது சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய நடிகைகள் மிகவும் குறைவாக இருந்தார்கள். அதனால் சோ, ஜெயலலிதாவை தனது ஆங்கில நாடகங்களில் நடிக்க வைத்தார்.
ஒரு முறை சோவின் ஆங்கில நாடகத்தை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அதில் ஜெயலலிதாவின் நடிப்பையும், ஸ்டைலையும் பார்த்து மிரண்டு போன எம்.ஜி.ஆர், சினிமாவில் ஜெயலலிதாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார். இதற்காக அவரது தாயார் சந்தியாவிடம் அனுமதியும் பெற்றார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தியும், டெஸ்ட் சூட் நடத்தியும் பார்த்தபோது ஜோடிப் பொருத்தம் சரியாக இல்லை. நடுத்தர வயதில் இருந்த எம்.ஜி.ஆருக்கு பக்கத்தில் குட்டி சிறுமியாக தெரிந்தார் ஜெயலலிதா. இதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நிராகரித்து விட்டார். சில வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலிதாவின் தோற்றத்தை கண்டு எம்.ஜி.ஆர் பின்னர் அவரை தனது ஆஸ்தான ஹீரோயினாக்கிக் கொண்டார்.