இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பருவமழை துவங்கியுள்ள நிலையில் எண்ணூர், கொசஸ்தலை கழிமுகத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள், மற்றும் ஆக்கிரமிப்புகளை ஆகற்றாவிட்டால் வட சென்னை வெள்ளக்காடாகும் என்று நேற்று கமல் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வெறும் வாய் வார்த்தையோடு நின்று விடாமல் களத்தில் இறங்கி வேலை பார்க்க துவங்கியுள்ளார்.
ஆம், இன்று காலையிலேயே கமல், எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் பார்வையிட்டார். சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அந்தப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் கமல், இதுநாள் வரை டுவிட்டரில் அறிக்கையாகவும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியாகவும் கொடுத்து வந்த கமல், இப்போது நேரடியாக களத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இனி அடுத்தடுத்து இதுபோன்று பல பிரச்னைகளை கமல் கையிலெடுத்து ஆய்வு மேற்கொள்வார் என கமல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலெக்டர் விளக்கம் : இந்த சூழ்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி, எண்ணுார் துறைமுக பகுதியில், 200 இடங்கள் வெள்ள பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவை அகற்றப்படும் என, விளக்கம் அளித்துள்ளார்.
கமல் நன்றி : சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது என கமல் டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார்.