தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2.0' படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இன்று 27-1017 துபாயில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவையொட்டி '2.0' படக்குழுவினர் துபாய் சென்றுள்ளனர். நேற்று அங்கு '2.0' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அந்த சந்திப்பில் பேசிய இயக்குநர் ஷங்கர் , '2.0' தமிழ் திரைப்படம் இல்லை, உலக அளவில் கவனம் பெறும் விதமாக இந்தியாவில் உருவாகியிருக்கும் ஹாலிவுட் தரத்திலான படம்.' என்று பேசியதோடு '2.0' படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை! '2.0'வின் கதை 'எந்திரன்' கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று புதிய தகவலைச் சொன்னார்.
இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே எந்திரன்-2 என்றுதான் சொல்லப்பட்டது. இப்போது திடீரென எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று ஷங்கர் அறிவித்திருப்பதன் பின்னணி என்ன? எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது.
அதன் இரண்டாம் பாகமாக எந்திரன்-2 படம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானதும், எங்கள் அனுமதியில்லாமல் எந்திரன்-2 என்று பெயர் வைக்கக் கூடாது என்றும், அப்படி வைத்தால் எங்களுக்கு ராயல்டியாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் பெரும் தொகையைக் கேட்டதாக சொல்லப்பட்டது.
அதன் பிறகே 2.0 என்று பெயர் வைத்தனர்.
தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட பட நிறுவனம் கோர்ட்டுக்குப் போக வாய்ப்பிருப்பதால் தான் '2.0' படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் ஷங்கர் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.