ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை : விஜய் நடித்துள்ள மெர்சலுக்கு எதிராக தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், அஷ்வத்தாமன் தாக்கல் செய்த மனுவில், மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள், இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக உள்ளன. படத்தை தொடர்ந்து திரையிட அனுமதித்தால், வரி ஏய்ப்பை துாண்டி விடுவது போலாகி விடும். எனவே, படத்தை திரையிட, தடை விதிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சிக்கின்றனர். இந்தியாவில் பணம் இல்லை என, சிரிப்பு நடிகர் வடிவேலு கூறுகிறார். மருத்துவம் பற்றி, தவறான தகவல்கள் தருகின்றனர் என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: இது, வெறும் சினிமா படம் தானே; நிஜ வாழ்க்கை இல்லையே. இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது தெரியுமா... ஒரு படம் குறித்த விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளால், அந்த படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படம், மக்களை எப்படி பாதிக்கிறது என, கூறுங்கள்.
பண மதிப்பு இழப்பு பற்றி, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இன்று கூட, அறிக்கை வந்துள்ளது. அவர்கள் மீது எல்லாம், வழக்குகள் தொடுக்கப்பட்டதா... சினிமா படங்களில் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை கோரலாம்; பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி வழக்கு தொடரலாம்.
மாற்றுத் திறனாளிகளை தவறாக சித்தரித்தால், அதை எதிர்க்கலாம். இப்படி, பொது நலனில் அக்கறை எடுத்து, வழக்கு தொடுத்தால் சரி.எதற்காக ஒரு படத்தை மட்டும் குறி வைத்து, செயல்படுகிறீர்கள். நீதிமன்றங்களை, பொது மேடையாக ஆக்க வேண்டாம்.
கருத்து சுதந்திரம் : ஒரு படத்தில் இடம் பெறும் வசனங்கள் குறித்து, சென்சார் போர்டு முடிவெடுக்கும். வெறும் வசனங்களை, கண்மூடித்தனமாக மக்களும் நம்ப மாட்டார்கள். ஜனநாயகத்தில், கருத்து சுதந்திரம் உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.