கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வட சென்னைக்கு பெரும் ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஏழை மக்களை புறக்கணிக்கும் எந்த அரசும் உதவாக்கரை தான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் கமல், ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, டெங்கு என பல விஷயங்களை கையில் எடுத்து குரல் கொடுக்க துவங்கியுள்ளார். இன்று எண்ணூர் துறைமுகம் பிரச்னையை கையில் எடுத்து உள்ளார். இதுதொடர்பாக கமல், தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...
கொசஸ்தலையாறு ஆக்கிரமிப்பு
கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றை விட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுசூழல் சிந்தையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். வல்லூர் மின் நிலையமும் வடசென்னை மின் நிலையமும் தங்கம் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன.
செவிடர் காதில் ஊதிய சங்கு
இதை எதிர்த்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்கு தான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் மெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன.
உதவாக்கரை அரசு
காமராஜர் துறைமுகத்தை விரிவு படுத்துகிறோம் என்ற போர்வையில் கொசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாக கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையையும், உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான். தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு.
பெரும் ஆபத்து
வழக்கமாக வரும் மழை சென்ற ஆண்டு போல் செய்தாலே வட சென்னை வெள்ளக் காடாகும். வானிலை ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பின் படி இந்த ஆண்டு அதிக மழை வரும் பட்சத்தில் 10 லட்சம் வட சென்னை மக்களும் பெரும் பொருட்ச்சேதமும், உயிர் சேதமும் கூட ஏற்படலாம் என்பது அறிஞர் அச்சம்.
100 வாக்கி டாக்கிகளும், பல படகுகளும் இந்தாண்டு வெள்ளத்தில் தவிக்கப்போகும் மக்களை ஒரு வேளை கரையேற்றலாம். அவர்கள் வாழ்க்கையில் கரை ஏற நிரந்த தீர்வு காண்பதே நல்லரசுக்கு அடையாளம் இது. நிகழ்ந்து முடிந்த தவற்றின் விமர்சனம் அல்ல, நிகழக் கூடிய ஆபத்திற்கான எச்சரிக்கை.
அரசு விளம்பரப்படுத்தும் ஆபத்துதவி எண்ணுக்கு கூப்பிடலாம். ஆபத்து வந்த பின் கூப்பிட்டு கதறாமல் முன்பே அரசையும் மக்களையும் எச்சரிக்கிறோம். மக்கள் செவி சாய்ப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால் அரசு அது செவிசாய்க்காமல் மெல்லச்சாயும் அது விரைவுற நாமும் உதவலாமே.
இவ்வாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.
கமல் நன்றி
மற்றொரு டுவீட்டில், காட்டுக்குப்பத்து பெண்களும், இளைஞர்களும் என் குரலுக்கு நன்றியைப் பதிவு செய்தது நெகிழ வைக்கிறது. நான் செய்வது உதவியல்ல கடமை. விரைலில் சந்திப்போம் என்று கூறியிருக்கிறார்.