அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'மெர்சல்' திரைப்படம் வெளிவருவதற்கு முன்பும், பின்பும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நேற்று 'ஜோசப் விஜய்' என்ற பெயரில் விஜய் வெளியிட்ட நன்றி அறிக்கை மூலம் புதிய சர்ச்சை உருவானது.
பொதுவாகவே, விஜய் ஒரு அறிக்கை வெளியிடுகிறார் என்றால் அவர் சார்பாக, விஜய் சொன்னதாக, அவருடைய பிஆர்ஓ அறிக்கை வெளியிடுவதுதான் வழக்கம். அதிலும் ஒரு வெள்ளைத் தாளில் விஜய் அறிக்கை என்று மட்டுமே அதில் இருக்கும். லெட்டர் பேடை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டதில்லை.
2014ம் ஆண்டு பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த ஒரு அறிக்கையில் தான் ஜோசப் விஜய் என்ற பெயர் இருந்தது. அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவர் வெளியிட்ட அறிக்கைகளில் லெட்டர் பேடை பயன்படுத்தியது கிடையாது. நேற்று அவர் மீண்டும் 'ஜோசப் விஜய்' என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டது சில குறிப்புகளை உணர்த்துவதாக இருந்தது.
சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, விஜய்யை 'ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டதும், அதன்பின் அதே பெயரில் உள்ள அவருடைய வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டதும் சர்ச்சைகளை உருவாக்கியது.
அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே விஜய் 'ஜோசப் விஜய்' என்ற தன்னுடைய உண்மையான பெயரில் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. தன்னுடைய மத அடையாளத்தை அவர் என்றுமே மறைத்ததில்லை என்றும் அவருடைய ரசிகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இப்படி பலத்த சர்ச்சை எழுந்துள்ள போது, விஜய்யும் போட்டியாக தன்னுடைய மத அடையாளத்தைக் காட்டுவது சரியா என்றும் மதச்சார்பற்றவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய்யை எந்த மதம் என்று பார்க்காமல் நேசிப்பவர்கள் அதிகம் இருக்கும் போது, திடீரென இப்படிச் செய்வது வேண்டுமென்றே செய்வது போல உள்ளது என்றும், சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மற்றவர்கள் விஜய்யைப் பற்றி விமர்சனம் செய்ததற்கும், விஜய் இப்போது அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டே இப்படி செய்வது போலவும் உள்ளதாகவே தெரிகிறது என்றும் சிலர் கூறுகிறார்கள்.