மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஏற்கனவே 'ஓ காதல் கண்மணி', 'சைத்தான்' உட்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் துணை நடிகராக முகம் காட்டியவர். தற்போது பிக்பாஸ் டைட்டிலை வென்ற பிறகு கதாநாயகனாக நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
சிம்புவை வைத்து 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணன், கௌதம் கார்த்திக்கை வைத்து சிப்பாய் என்ற படத்தை இயக்கினார். ஏறக்குறைய 3 வருடங்களுக்கு மேலாக அந்தப் படம் முடங்கியே கிடக்கிறது. இந்நிலையில் ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் சரவணன்.
ஏற்கெனவே 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணன் அதன் பிறகு எத்தனையோ ஹீரோக்களை வைத்து படம் இயக்க முயற்சி செய்தார்.
எதுவுமே வொர்க் அவுட்டாகவில்லை. கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் தொடங்கப்பட்ட 'சிப்பாய்' படமும் முடங்கிவிட்டது. எனவே ஆரவை வைத்து இயக்கும் படத்தை பரபரப்பாக பேசவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓவியாவை கதாநாயகியாக நடிக்க அணுகியுள்ளார்.
ஆரவ் ஹீரோ என்று சொன்னதுமே கதையைக் கூட கேட்காமல் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் ஓவியா. நம்பிக்கை துரோகத்தை இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது.