மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படம் 2.O. ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நாளை(அக்., 26) பிரம்மாண்டமாய் நடைபெறுகிறது. முன்னதாக துபாயில் 2.O படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் ரஜினி, அக்ஷ்ய், எமி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரஸ்மீட்டில் பிரபலங்கள் பேசியதாவது...
ரஜினி
2.O இந்தியாவின் கவுரவப்படம் என்றார் ரஜினி. நிஜ வாழ்க்கையில் நான் நடிப்பது கிடையாது, ஏனென்றால் அதற்கு யாரும் பணம் தருவதில்லை. ஆகவே சினிமாவில் மட்டும் நடிக்கிறேன்.
ஷங்கர்
2.O படம் ஹாலிவுட் படம் போன்றது. ஆனால் எந்த படத்தையும் காப்பி அடிக்கவில்லை. படத்தின் கதை உலகளாவியது. அதனால் தான் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். 2.O - அறிவியல், சமூகம் சார்ந்த கற்பனை கதை. இது தமிழ் படம் கிடையாது, இந்திய படம். எந்திரன் படத்தின் தொடர்ச்சி கிடையாது, முற்றிலும் வித்தியாசமான புதிய கதைகளத்தில் உருவாகிறது. இந்தப்படம் 3டி படங்களை ஊக்கப்படுத்தும் விதமாக உருவாகி உள்ளது என்றார்.
அக்ஷ்ய் குமார்
2.O படத்தில் என்னுடைய ரோல் மிகவும் வித்தியாசமானது. இதுவரை இப்படியொரு ரோலில் நான் நடித்தது இல்லை. வில்லன் என்று சொல்ல முடியாது, அந்த கேரக்டர் நிறைய விஷயங்களை பிரதிபலிக்கும். இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார் ஷங்கர். இதற்காக நாங்கள் ரிகர்சல் எல்லாம் பார்க்கவில்லை, ஷங்கர் என்ன சொன்னாரோ அதை செய்தேன். படத்தில் ஒரு நாளைக்கு மேக்க-அப் போட 3.5 மணிநேரம் ஆகும், அதை கலைக்கவும் 1.5 மணிநேரம் ஆகும் என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
2.O படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்கள் நாளை வெளியாகிறது. மற்றொரு பாடல் பின்னர் வெளியிடப்படும். இதுதவிர பின்னணி இசை கலந்து நிறைய சின்ன சின்ன பாடல்கள் இருக்கும் என்றார்.