ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இங்கே பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதன் அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும், அதை கமலே நடத்துவாரா, இல்லை வேறு பிரபல நடிகர் நடத்துவாரா என்கிற வாத, விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் கடந்த 2000ல் ஆரம்பித்து தற்போது வரை சுமார் பதினெட்டு வருடங்களாக ஒரு டிவி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்றால் அது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை தவிர வேறு யாராக இருக்கமுடியும்..
ஆம்.. 2000ல் ஆரம்பித்த 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி வெற்றிகராமாக பதினெட்டாவது ஆண்டில் தனது ஒன்பதாவது சீசனை நடத்திக்கொண்டு இருக்கிறது.. இந்த ஒன்பது சீசன்களில் 2007ல் 3வது சீசனை மட்டும் ஷாருக்கை வைத்து நடத்தினார்கள்.. அதுவும்கூட அமிதாப் அப்போது உடல்நலம் குன்றி இருந்த காரணத்தால் தான்.. ஆனால் அதற்கு வரவேற்பு குறைவாக இருக்கவே, எதற்கு ரிஸ்க் என இபோதைய சீசன் வரை அமிதாப்பை வைத்தே தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இப்போது விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்காக பேசிப்பேசி தற்போது தொண்டை வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார் அமிதாப் பச்சன். மருந்து, மாத்திரைகளின் உதவியுடன் எப்படியோ இந்த சீசன்-9ஐ சமாளித்துவிட்டேன் என கூறியுள்ளார் அமிதாப். இந்த 9வது சீசனில் இதுவரை 42 எபிசோடுகள் முடிவடைந்துவிட்டன. அனேகமாக 50வது எபிசோடுடன் இந்த சீசன் நிறைவுபெறும் என தெரிகிறது.