‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கைதி எண்-150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. பாகுபலி படத்தைப்போன்று சரித்திர கதையில் உருவாகும் இந்த படமும் அந்த படத்தைப்போன்று பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடிக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில செட் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் படப்பிடிப்பை டிசம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். சைரா நரசிம்ம ரெட்டிக்காக ஐதராபாத்திலுள்ள ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் பிரமாண்ட செட் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.