‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கைதி எண்-150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. பாகுபலி படத்தைப்போன்று சரித்திர கதையில் உருவாகும் இந்த படமும் அந்த படத்தைப்போன்று பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடிக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில செட் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் படப்பிடிப்பை டிசம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். சைரா நரசிம்ம ரெட்டிக்காக ஐதராபாத்திலுள்ள ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் பிரமாண்ட செட் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.