டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கைதி எண்-150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. பாகுபலி படத்தைப்போன்று சரித்திர கதையில் உருவாகும் இந்த படமும் அந்த படத்தைப்போன்று பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடிக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில செட் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் படப்பிடிப்பை டிசம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். சைரா நரசிம்ம ரெட்டிக்காக ஐதராபாத்திலுள்ள ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் பிரமாண்ட செட் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.