பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாயா, ஜோக்கர், மாநகரம், கூட்டத்தில் ஒருத்தன் என போன்ற படங்களைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் அருவி.
இப்படம் ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் அருவி படத்தை விரைவில் வெளியிட முடிவு செய்திருந்தனர். அதற்கு முன்னோட்டமாக இப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலருக்கும் சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சிறப்புக்காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டு 'அருவி' படத்தை பார்த்தார். படம் முடிந்த கையோடு அருவி படத்தைப் புகழ்ந்து தன்னுடைய பேஸ்புக், டுவிட்டரில் பாராட்டினார்.
''அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனின் 'அருவி' பட சிறப்புக்காட்சியைப் பார்த்தேன். அருமையான டீம் ஒர்க். அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளடக்கி இப்படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். கதாபாத்திர வடிவமைப்பும், நடிகர்களின் பங்களிப்பும்... குறிப்பாக நடிகை அதிதி பாலனின் நடிப்பும் மிகச்சிறப்பு. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தை தியேட்டர்களில் கண்டுகளித்து திறமையான இளைஞர் கூட்டத்தை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!'' என்று குறிப்பிட்டார்.
ஆனாலும் அருவிக்கு இன்னும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் சமீபத்தில் திரையுலகம் சந்தித்த கேளிக்கை வரி, தியேட்டர் டிக்கெட் கட்டணம் போன்ற பிரச்னைகளால் ரிலீஸ் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் அருவியை சற்று தள்ளி வைத்துவிட்டு கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.