சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகர் பிரகாஷ்ராஜ் எப்போதுமே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். கன்னட பத்திரியாளரும், பிரகாஷ்ராஜின் தோழியுமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை அவர் கண்டித்து பேசியபோது "கொலை பற்றி எந்த வருத்தமும் தெரிவிக்காத பிரதமர் நரேந்திரமோடி என்னை விட சிறந்த நடிகர்" என்ற தெரிவித்தார்.
இந்த கருத்தால் அவர் ஆளும் கட்சியின் கடும் கண்டனத்தை சந்தித்தார். கர்நாடகாவில் பிரகாஷ்ராஜுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் தனது அடுத்த அதிரடி கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.
உத்தர பிரதேச மாநில அரசு அந்த மாநிலத்தின் சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியது. பின்னர் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்த பின்னர் மீண்டும் அதை சேர்த்தது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டரில் கருத்துரிமை, கைவினைக் கலைஞர்கள், தாஜ்மஹால் பற்றி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதில் தாஜ்மஹாலை பற்றி குறிப்பிடும் போது, "நீங்கள் தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கு முன்பாக, நான் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒருமுறை காட்டி விடுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகிறது. உத்தரபிரதேச அரசை மறைமுகமாக தாக்கி உள்ள இந்த கருத்தால் அந்த மாநில அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளது.