'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அருந்ததி படத்தின் மூலம் பிரபல நடிகையானவர் அனுஷ்கா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட அவர், ஹீரோக்களுக்கு இணையாக வெயிட்டான கதைகளிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். அந்த வகையில், அருந்ததியைத் தொடர்ந்து, ருத்ரம்மா தேவி, பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட சில படங்கள் அனுஷ்காவின் நடிப்பாற்றலுக்கு சான்றாக அமைந்தன.
இந்த நிலையில், தற்போது பாக்மதி என்ற படத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவின் புதிய படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகுபலி-2விற்கு பிறகு பாக்மதி படத்தில் வெயிட்டான கதையில் நடித்திருக்கிறேன். இதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும், எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அனுஷ்கா.