டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் எல்.சுரேஷ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் சாரம்சம் வருமாறு:
தீபாவளிக்கு வெளி வந்த மெர்சல் படத்துக்கு ஏற்படுத்தப்பட்ட பிரச்னைகள் வருத்தமளிப்பதாக உள்ளது. ஒரு திரைப்படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு அதில் மாற்றம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஒரு படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வதோ, பதிவிறக்கம் செய்து பார்ப்பதோ சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.
ஒரு முன்னணி அரசியல் கட்சியின் தலைவரே தவறான முறையில் சட்டவிரோதமாக பார்த்திருக்கிறார். இதைக்கண்டு திரைத்துறை வெட்கப்படுகிறது, கவலைப்படுகிறது. பைரசி தடுப்பு சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.