இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள சினிமாவில் நடிகர் பசுபதிக்கென தானது படங்களில் முக்கியமான ஒரு கேரக்டரை ஒதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்.. பெரும்பாலும் தமிழ்-மலையாளம் இணைந்த படங்களையும் உருவாக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டும் இவர், பசுபதியை வைத்து இதற்கு முன் நம்பர் 66 மதுரா பஸ் மற்றும் வைரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் 'கிணர்' (கிணறு) என்கிற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப்போல இந்தப்படத்திலும் பசுபதியை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்..
அதுமட்டுமல்ல, ஜெயப்ரதா, அர்ச்சனா, ரேவதி என மூன்று சீனியர் நடிகைகள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு இருமொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில் 'கேணி' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. 1991ல் தளபதி படத்தில் இளையராஜா இசையில் சூப்பர்ஹிட்டான 'காட்டுக்குயிலு' பாடலை தொடர்ந்து 26 வருடங்கள் கழித்து யேசுதாசையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் ஒன்றாக இணைத்து இதில் ஒரு பாடலை பாடவைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்.