இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1989ல் சிவா என்ற படத்தில் ராம்கோபால்வர்மாவை இயக்குனராக்கியவர் நாகார்ஜூனா. அதன்பிறகு அன்ஹாம், கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களிலும் அவர்கள் கூட்டணி இணைந்தது. அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில், தற்போது அப்பா-மகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் ஒரு ஆக்சன் படத்தில் மீண்டும் நாகார்ஜூனா-ராம்கோபால் வர்மா இணைகிறார்கள்.
மேலும், அடுத்தபடியாக லட்சுமியின் என்டிஆர் என்ற என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையை பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கயிருந்தார் ராம்கோபால்வர்மா. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜெயசிம்ஹா மற்றும் இன்னொரு தெலுங்கு படத்தையும் முடித்த பிறகே பாலகிருஷ்ணா, லட்சுமியின் என்டிஆர் படத்திற்கு கால்கீட் கொடுத்திருக்கிறாராம்.
அதனால் லட்சுமியின் என்டிஆர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் இயக்க திட்டமிட்டுள்ள ராம்கோபால்வர்மா, முன்னதாக, நாகார்ஜூனா நடிக்கும் படத்தை நவம்பர் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்போகிறாராம்.