பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மெர்சல் படப் பிரச்சினையில் அதற்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தது கமல்ஹாசன். அவர் தனது டுவிட்டரில் "மெர்சல் படம் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. மறுதணிக்கை செய்யக்கூடாது. விமர்சனங்களை தர்க ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சிப்பவர்களை மவுனமாக்க கூடாது. பேசினால்தான் இந்தியா ஒளிரும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு மற்ற நடிகர், நடிகைகள் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.
இந்நிலையில் மெர்சல் படம் நேற்று (அக்.,22) கமலுக்கு போட்டுக் காட்டப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலத்தில் இருக்கும் டிஜிட்டல் தியேட்டரில் கமல் மெர்சல் படம் பார்த்தார். அவருடன் விஜய், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குனர் அட்லி ஆகியோரும் படம் பார்த்தனர். படம் முடிந்ததும் கமல் அனைவரையும் பாராட்டினார். அதன் பிறகு 20 நிமிடம் விஜய்யும், கமலும் தனியாக சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.