ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிய அவர், வைபவ் நாயகனாக நடித்த மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்து வந்தார். அந்த படம் தீபாவளிக்கு வெளியானது. அந்த படம் வெற்றி பெறவில்லை என்றபோதும், பிரியா பவானி சங்கரின் நடிப்பு பேசப்பட்டது. அடுத்த திரிஷா வந்து விட்டார் என்று கூறினார்கள்.
இந்தநிலையில், மேயாதமான் படத்தை அடுத்து பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையில் இந்த படம் தயாராகிறது. தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரனும் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தனுஷின் கொடி படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.