அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தீபாவளிக்கு தமிழில் வெளியான விஜய்யின் மெர்சல் படம், அதிரின்டி என்ற பெயரில் அக்டோபர் 26-ந்தேதி தெலுங்கில் வெளியாகிறது. மெர்சல் படத்தின் இந்த தெலுங்கு பதிப்பிற்கு இதுவரை பெரிய எதிர்ப்புகள் இல்லாமல்தான் இருந்து வந்தது. ஆனால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சி, வசனங்கள் ஏற்படுத்தியுள்ள பரபரப்பு காரணமாக ஆந்திராவில் இப்போதே அதிரின்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, ஏற்கனவே முடிவு செய்திருந்ததை விடவும் தற்போது தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் அதிரின்டியை வெளியிடவும் தயாராகி வருகிறார்களாம். அந்த அளவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிரின்டி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறதாம். ஆனால், தற்போது ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளும், வசனங்களையும் நீக்க வேண்டும் என்கிற எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதிரின்டி படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அந்த காட்சிகள் இல்லாமலேயே வெளியாகும் என்று தெரிகிறது.