பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் படம் '2.0'. இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்காக டிக்கெட்டுகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் உதவி இயக்குனராக 'கர்ண மோட்சம்' என்ற குறும் படத்திற்காகத் தேசிய விருது பெற்றவரான முரளி மனோகர் என்பவர் பணியாற்றி வருகிறார். தனக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என அவருடைய முகப் புத்தகத்தில் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக பல உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும் அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்கள்.
இந்த விவகாரம் மீடியாக்களிலும் வெளியானதைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமான லைகா உதவி இயக்குனர் முரளி மனோகருக்கு உரிய சம்பளத்தைக் கொடுத்திருக்கிறது. இது பற்றி முரளி மனோகர் அவருடைய முகப் புத்தகத்தில் தெரியப்படுத்தியுள்ளார். “லைகா நிறுவனம் உரிய ஊதியத்தைக் கொடுக்கத் தயாராய்தான் இருந்திருக்கிறது. அன்புமிக்க என் இயக்குநருடன் இருக்கும் ஒரு புல்லுருவி ஒன்றுதான் மின்னஞ்சல் போட்டு அதற்கும் எனக்குமான முன் விரோதத்திற்கு பழி தீர்க்கிறேன் பேர்வழி என புத்திசாலித்தனமாக செயல்படுவதாக எண்ணி வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது.
என் ஆசிரியர், குரு, ஷங்கர் சாருக்காக நான் மீண்டும் காலை முதல் வேலையில் இணைகிறேன். அவருக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். அந்தப் புல்லுருவிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கு ஊதியம் கொடுக்க வந்த, என்னைப் புரிந்துகொண்ட லைகாவிற்கு நன்றிகளும் வணக்கமும் !. என் அன்பிற்கினிய இயக்குநருக்காக ஊரிலிந்து பணிக்குத் திரும்புகிறேன் !,” என அவர் பதிவிட்டுள்ளார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகும் ஒரு படத்திற்கு உதவி இயக்குனருக்கு சரியான சமயத்தில் சம்பளம் தரப்படாதது தமிழ்த் திரையுலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.