பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகி உள்ள மெர்சல் படம், ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. மெர்சல் படத்திற்கு ஆதரவுகளும், எதிர்ப்புக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொன்ன விஜய், அட்லிக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மெர்சல் படத்தில் மக்களுக்கு சமூக கருத்துக்களை எடுத்துரைத்த விஜய், அட்லிக்கு பாராட்டுக்கள். மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட மிரட்டல். தணிக்கை செய்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே விமர்சி்க்கும் காட்சிகளும், வசனங்களும் இடம்பெறுகின்றன. அது தான் ஜனநாயக சட்டம் வழங்கி உள்ள கருத்து சுதந்திரம்.
ஒரு சில அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் வசனங்கள், காட்சிகள் மட்டும் தான் சினிமாவில் இடம்பெற வேண்டும் என்றால், தணிக்கை குழு எதற்கு? தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என விஷால் தெரிவித்துள்ளார்.