ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனைப் போன்ற நபர்கள் இந்திய சினிமாவிலும் இருப்பதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.
ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி மீது ஏஞ்சலினா ஜோலி, லுபிடா ந்யாங்கோ உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் பாலியல் புகார் கூறினர்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பாலியல் ரீதியான தொந்தரவு சினிமா துறையில் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. இது பாலியல் ரீதியான பிரச்சனை மட்டும் அல்ல, பெண்களின் வலிமையை அடக்கி ஆள நினைக்கும் ஆண்களின் அதிகாரத் தோணி. வெயின்ஸ்டீனைப் போன்ற நபர்கள் இங்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.