ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். இப்படத்தில் ஜிஎஸ்டி.,க்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றதால், அதனை நீக்க வேண்டும் பா.ஜ., கூறி வந்தது.
பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வரும் மெர்சலுக்கு எதிர்க்கட்சிகளும், பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பா.ஜ.,வின் எதிர்ப்பு காரணமாக படத்தில் 4 காட்சிகளை நீக்க படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மெர்சல் படம் பற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மோடி அவர்களே, சினிமா என்பது தமிழர்களின் ஆழமான கலாச்சாரத்தையும் மொழியையும் வெளிப்படுத்துவது ஆகும். மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மொழியை மதிப்பிழக்க செய்ய முயற்சிக்க வேண்டாம்" என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.