'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தவர் ரகுல்பிரீத் சிங். ஆனால் அந்த படங்களுக்குப் பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லை. அதனால் தெலுங்கிற்கு சென்று நடித்தார். குறுகிய காலத்தில் அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார் ரகுல்பிரீத் சிங். என்றாலும், கடந்த ஆண்டு அவர் தெலுங்கில் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில், ஸ்பைடர் படத்திற்கு பிறகு எந்த புதிய படத்திலும் ரகுல்பிரீத்சிங் கமிட்டாகவில்லை. தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் நடித்திருப்பவர் அடுத்தபடியாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து தெலுங்கிற்கு ஒரு சிறிய இடைவெளி கொடுக்க முடிவு செய்துள்ள அவர், மேலும் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.