டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1940-களில் ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகர் சார்லி சாப்ளின். இவர் நடித்த வசனம் இல்லாத மவுன படங்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை ஏற்படுத்தியது. சார்லி சாப்ளின் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது.
சார்லி சாப்ளின் நடித்த படங்களில் மிகவும் புகழ்பெற்றது சிட்டி லைட்ஸ் என்ற படம். இந்த படத்தை தழுவி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் எடுத்தார்கள். தமிழில் ராஜி என் கண்மணி என்ற பெயரில் தயாரானது. இந்தப் படம் சிட்டி லைட் படத்தின் தழுவல் என்றாலும் கிட்டத்தட்ட ரீமேக் படம் போன்றே அமைந்தது. இதில் சார்லி சாப்ளின் கேரக்டரில் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார். சிட்டி லைட்டில் சார்லி சாப்ளின் காட்டிய மேனரிசங்களை அப்படியே செய்திருந்தார். சந்திரபாபு, ரங்காராவ் ஆகியோரும் நடித்திருந்தார்கள். கே.ஜே.மகாதேவன் இயக்கி இருந்தார்.
தமிழ், தெலுங்கில் தயாரான இந்தப் படம் பெரிய தோல்வியை சந்தித்தது. சார்லி சாப்ளின் இடத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனை ரசிகர்கள் ஏற்கவில்லை. என்றாலும் மற்ற நடிகர் நடிகைகள் நடிப்பு பேசப்பட்டது. பாலசரஸ்வதி பாடிய "மல்லிகைப் பூ ஜாதி ரோஜா" என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது.