டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள மெர்சல் படம், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்சில் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் மத்திய மாநில அரசுகளை கோபப்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள் நேரடியாகவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இது குறித்து படத்துக்கு சான்றிதழ் வழங்கிய சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகன் கூறியிருப்பதாவது:
மெர்சல் படத்தில் யாரையும் பாதிக்கிற வகையிலோ, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலோ வசனங்கள் இல்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படத்தில் காட்சிகளை நீக்க வேண்டும் என்றால் அதற்கு தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்கிறார் மதியழகன்.