‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் நடித்து வெளிவந்துள்ள மெர்சல் படத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த படத்திற்கு மத்திய மாநில அரசுகள் மறைமுகமான வழியில் தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனாலும் திரையுலக பிரபலங்கள் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன் விபரம் வருமாறு:
கமல்ஹாசன்
மெர்சல் படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. அதை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம். விமர்சனங்களுக்கு தர்க்க ரீதியாக பதில் அளியுங்கள். விமர்சிப்பவர்களை மவுனம் ஆக்காதீர்கள். பேசும்போதுதான் இந்தியா ஒளிரும் என டுவிட்டரில் கமல் தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித்:
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி மற்றும் சில சமூக பிரச்சினைகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் மனதில் தோன்றும் எண்ணங்களே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இயக்குனர் அமீர்
மத்திய அரசை விமர்சிக்கும் வசனங்கள் மெர்சல் படத்தில் இருப்பதால் ஆளும் பா.ஜ.க அரசு மிரட்டுகிறது. பா.ஜ.க சொல்வதை கேட்கும் வகையில்தான் மாநில அரசு செயல்படுகிறது. இந்த விஷயத்தில் மெர்சல் பின் வாங்கக்கூடாது.
நடிகை குஷ்பு
மெர்சலால் சிலருக்கு தூக்கம் போய்விட்டது. காட்சிகளை நீக்கச் சொல்வது பா.ஜ.க.வின் பயத்தை காட்டுகிறது.