மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படம் ஒரு 'பிளாக் பஸ்டர்' படம் என்று ஆமீர்கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஹிந்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.
“ரஜினி சார் என்னை தொலைபேசியில் அழைத்து படம் பற்றிக் கூறினார். இயக்குனர் ஷங்கரைச் சந்தித்த போது, இந்தப் படம் ஒரு சாதனை படைக்கப் போகும் ஒரு பிளாக் பஸ்டர் படம் என்று உணர்ந்து கொள்ள எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை.
அந்தப் படத்தைப் பற்றி ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் ஆச்சரியப்பட்டுப் போவேன். படத்தில் ரஜினி சாரைத் தவிர வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. இந்தப் படம் ரஜினி சாருக்கான படம். படத்துடன் என்னால் எமோஷனல் ஆக இணைய முடியவில்லை. அதனால்தான் இந்த '2.0' பட வாய்ப்பை நான் ஏற்க மறுத்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
ஆமீர் கான் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.