விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படம் ஒரு 'பிளாக் பஸ்டர்' படம் என்று ஆமீர்கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஹிந்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.
“ரஜினி சார் என்னை தொலைபேசியில் அழைத்து படம் பற்றிக் கூறினார். இயக்குனர் ஷங்கரைச் சந்தித்த போது, இந்தப் படம் ஒரு சாதனை படைக்கப் போகும் ஒரு பிளாக் பஸ்டர் படம் என்று உணர்ந்து கொள்ள எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை.
அந்தப் படத்தைப் பற்றி ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் ஆச்சரியப்பட்டுப் போவேன். படத்தில் ரஜினி சாரைத் தவிர வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. இந்தப் படம் ரஜினி சாருக்கான படம். படத்துடன் என்னால் எமோஷனல் ஆக இணைய முடியவில்லை. அதனால்தான் இந்த '2.0' பட வாய்ப்பை நான் ஏற்க மறுத்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
ஆமீர் கான் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.