'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அரவான்' படத்தில் தன்ஷிகா தவிர இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தவர் தான் மலையாள நடிகை அர்ச்சனா கவி. மலையாள சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அபீஸ் மேத்யூ என்பவரை கடந்த வருடம் இவர் திருமணம் செய்துகொண்டார்.
இந்த அபீஸ் மேத்யூ சின்னத்திரையில் நடத்தி வரும் 'சன் ஆப் அபிஸ்' என்கிற காமெடி ஷோ ரொம்பவே பிரபலம். சினிமாவில் உள்ள வி.வி.ஐ.பிக்களை அழைத்து வந்து அவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து அனுப்பவது தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.
இவரது நிகழ்ச்சிக்கு யூடியூப்பில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இரண்டு மில்லியனுக்கும் குறையாத பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அப்படித்தான் சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் புதிய எபிசோட் ஒன்றில் துல்கர் சல்மானையும், பாலிவுட் குயீன் வித்யாபாலனையும் பங்கேற்க வைத்து நிகழ்ச்சியை நகைச்சுவையாக கொண்டு சென்றதுடன், பங்கேற்ற இருவருக்கும் வித்தியாசமான அனுபவத்தையும் கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அதிலும் வித்யாபாலனுடன் இணைந்து பங்கேற்றது புதிய அனுபவமாக இருந்தது என்பதையும், தான் இதுவரை கலந்து கொண்ட ஷோக்களில் இது புது மாதிரியாக இருந்தது என்பதையும் துல்கர் சல்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு அபீஸ் மேத்யூவை பாராட்டியுள்ளார்.