மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மெர்சல் படத்தில் சர்ச்சைக்கு உள்ளான ஜிஎஸ்டி, டிஜிட்டல் உள்ளிட்ட காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். இப்படத்தில் ஜிஎஸ்டி., மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் படத்தில் ஜிஎஸ்டி., மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார். இவரைப்போன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க, மெர்சல் படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸின் முரளி ராமசாமி முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் அவர் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.