தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெர்சல் படத்தில் சர்ச்சைக்கு உள்ளான ஜிஎஸ்டி, டிஜிட்டல் உள்ளிட்ட காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். இப்படத்தில் ஜிஎஸ்டி., மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் படத்தில் ஜிஎஸ்டி., மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார். இவரைப்போன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க, மெர்சல் படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸின் முரளி ராமசாமி முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் அவர் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.