Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்ன தான் நடக்கிறது? குழப்பத்தில் கோடம்பாக்கம்...!!

What happens in Prabhudeva-Nayanthara matter...?ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழகு பதுமையாக, கேரள வரவாக வந்தவர் டயானா மரியம் குரியம். படத்திற்காக நயன்தாரா என்று பெயர் மாற்றி ரசிகர்களிடம், ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன் என்று பாடி பரவசப்படுத்தினார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த நயன்தாராவுக்கு சொந்த வாழ்க்கை சோகமாகி கொண்டிருக்கிறது. நட்சத்திரமாய் ஜொலிக்க வந்தவர் நட்சத்திர காதலால் நசுங்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் காதல், நெருக்கம் என்று சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவுக்கு, கல்யாணம் ஆகமாலேயே சிறந்த தம்பதிகளாக பிரபுதேவா-நயன்தாரா தேர்ந்தெடுக்கப்பட்டது தான் ரொம்ப கொடுமை. காதல் கல்யாணம் பண்ணிய முதல் மனைவி ரமலத்தை, குழந்தைகளோடு தவிக்க விட்டு விவாகரத்து கேட்டது இன்னும் பெரிய கொடுமை. இருந்தாலும் காதல் ஒரு பக்கம், பிள்ளை பாசம் ஒரு பக்கம் என்று பிரபுதேவாவிற்கு நயன்தாரா கொடுத்த தண்டனை பெரிதுதான். இதிலிருந்து தப்பிக்கத்தான் ஓடி ஓளிந்து கொண்டு இருக்கிறார் பிரபுதேவா என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.

இதுஒருபுறம் இருக்க தெலுங்கில் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு, விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் நயன்தாரா. பிரபுதேவா வெடி படம் முடித்த பிறகு கல்யாணம், சொந்த வீடு வாங்கிட்டு கல்யாணம், அப்புறம் இந்தி படம் முடித்து கல்யாணம் என்று கணக்கு போட்டவருக்கு, நிமிஷம் எல்லாம் வருஷமாகி வாட தொடங்கினார். மும்பை, புனே, சென்னை என்று பறந்த காதல் இப்போது ஆட்டம் கண்டு போய் உள்ளது. இதனால் நயன்தாரா, தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு பணம் கட்ட வேண்டும், தன் செலவுகளை பார்க்க வேண்டும். காசு புரண்ட கையாச்சே என்ன செய்வது. அதுதான் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சரி நயன்தாரா மீண்டும் நடிக்க வந்து விட்டார். அவரது பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டால் அங்கேயும் சொல்ல முடியாத சோகம் நிழலாடுகிறது. சொந்தம், பந்தம், பார்ட்டி, பிறப்பு, இறப்பு என்று எதிலும் கலந்து கொள்ள முடியாமல் குடும்பமே ஒதுக்கப்பட்டது போல் இருக்கிறதாம். பலரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறார்களாம். பிரபுதேவாவுடன் பிரிவு, தெலுங்கு படங்களில் பிஸி என்று நயன்தாராவை பற்றி மீடியாக்களில் பரபரப்பாக வந்தாலும், நயன்தாராவுடன் இப்போது இருப்பது பிரபுதேவாவின் நண்பர் ராஜேஷ் தானாம். ‌தனியார் வங்கியில் ‌மேலாளராக இருக்கும் ராஜேஷ் தான் இப்போது நயன்தாராவின் கால்ஷீட்டை பார்த்து கொள்கிறாராம்.

பிரபுதேவாவை ஒதுக்கி வைத்தவர் இப்போது அவரது ‌நண்பரை மட்டும் மேலாளராக வைக்க காரணம் என்ன...? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் தெலுங்கில் நடிக்க இருக்கும் படத்திற்கு 1.5கோடி சம்பளம், அடுத்து தமிழில் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் என்று நயன்தாராவை பற்றி பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, உண்மையிலேயே பிரபுதேவாவை நயன்தாரா பிரிந்து விட்டாரா...? அல்லது  மக்களை நம்ப வைக்க பிரபுதேவா-நயன்தாரா நடத்தும் நாடகமாக...? என்ற குழப்பத்த‌ில் இருக்கிறது கோடம்பாக்கம்.

Tags »
Prabhudeva, Nayanthara, பிரபுதேவா, நயன்தாரா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (18)

meenu - Canada,கனடா
2012-02-19 18:37:55 Report Abuse
 meenu இதை பார்த்த பிறகாவது, ருசி கண்ட பூனை ஆகிய கல்யாணம் ஆன ஆண்களிடம் கவனமாக இருங்கள் இளம் பெண்களே. ஏன் என்றால் நமக்கு எல்லாம் சினிமா நடிகர், நடிகைகள் தானே role model .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kamal - portsmouth,யுனைடெட் கிங்டம்
2012-02-19 13:20:50 Report Abuse
 kamal ரம்லத் விட்ட சாபம் தான் இது ............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SIVA - chennai,இந்தியா
2012-02-04 17:04:35 Report Abuse
 SIVA சில சமயங்களில் , இந்த மாதிரியான கசப்பான செய்திகளை தமிழாக மக்கள் படிக்கதான் வேண்டிருகிறது !. எப்படிவேனாலும் வாழ்றது வாழ்க்கைனா ?-" மனிதனுக்கும் விலங்கிற்கும் என்ன வித்தியாசம் ? தமிழ் , தமிழ் கலாச்சாரம் என்று குரல் எழுப்புவதை விட , ஒவ்வொரு தனிமனிதனும் ஒழுக்கமாக வாழ்தல் , தமிழ்பண்பாடு தானாக சிறகடித்து பறக்கும் . " ... அந்த நடிகயுடைய குடும்ப நிலையை நினைக்கும் பொது ஒரு விசியம் தோன்றுகிறது " பணம் -> ஒருவருடைய பொருளாதரத்தை உயர்த்தலாம் .. ஆனால் அதை கொண்டு நிம்மதி வாங்க முடியாது ... "..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Iqbal - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-02-03 18:01:15 Report Abuse
Iqbal மானங்கெட்ட பொளப்பு இது இந்த பொளப்புக்கு பிச்சை எடுக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vijay - mumbai  ( Posted via: Dinamalar Android App )
2012-02-03 02:21:10 Report Abuse
vijay jk வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in