நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் நிறைய தமிழர்கள் வசிக்கிறார்கள். இதனால் பெங்களூர் மற்றும் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில நகரங்களில் மெர்சல் திரையிடப்பட்டது.
பெங்களூர் மற்றும் மைசூரில் மெர்சலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள விஜய் ரசிகர்கள் மெர்சல் வெளியான தியேட்டர்களில் விஜய்க்கு உயரமான கட்-அவுட்கள் வைத்து மாலை அணிவித்திருந்தனர். தியேட்டர்களை தோரணம் கட்டி அலங்கரித்திருந்தனர். பெங்களூர் மல்லேஸ்புரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கன்னட அமைப்பினர் திரண்டு மெர்சல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கிருந்த விஜய் கட்அவுட்களை அடித்து நொறுக்கினர். படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்களை விரட்டி அடித்தனர்.
இதேபோல சம்பிகே தியேட்டர் முன் கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் கோவிந்து தலைமையில் பலர் திரண்டு படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெங்களூருவில் மெர்சல் திரையிப்பட்ட அனைத்து தியேட்டருக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல மைசூரிலும் மெர்சல் திரையிடப்பட்ட தியேட்டர் முன் கன்னட அமைப்பினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். பல தியேட்டர்களில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது.