Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நில வேம்பு கஷாயம் குறித்த கருத்துக்கு கமல் விளக்கம்

20 அக், 2017 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Kamal-explained-about-Nilavembu-Kashayam-issue

தற்போது நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் பலர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நோய் வராமல் தடுக்க நிலவேம்பு கஷாயம் குடிப்பது அதிகரித்துள்ளது. அரசும் அதனை ஊக்குவித்து வருகிறது.

கமல் விமர்சனம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் தனது டுவிட்டரில் நிலவேம்பு கஷாயம் குறித்து ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார் அதில் "சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும். ஆராய்ச்சியை அலோபதியார்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பாரம்பரியா காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவு உண்டென்பதும் பாரம்பரியம்தான்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கமலுக்கு எதிர்ப்பு
நிலவேம்பு கஷாயம் டெங்குவுக்கு சரியான மருந்தல்ல. அதை அருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பது கமலின் கருத்து. கமலின் இந்த கருத்தை எதிர்த்து சித்தா ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பல தனிப்பட்ட சித்த மருத்துவர்களும் கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கமல் விளக்கம்
இந்த நிலையில் கமல் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த டுவீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன் அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.

மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்க சொல்லியிருக்கிறேன்.

ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்
சித்தா, அலோபதி என்ற தனி சார்பு எனக்கில்லை. அதுவரை டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்றால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்
இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in