ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் பலர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நோய் வராமல் தடுக்க நிலவேம்பு கஷாயம் குடிப்பது அதிகரித்துள்ளது. அரசும் அதனை ஊக்குவித்து வருகிறது.
கமல் விமர்சனம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் தனது டுவிட்டரில் நிலவேம்பு கஷாயம் குறித்து ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார் அதில் "சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும். ஆராய்ச்சியை அலோபதியார்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பாரம்பரியா காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவு உண்டென்பதும் பாரம்பரியம்தான்" என்று குறிப்பிட்டிருந்தார்.
கமலுக்கு எதிர்ப்பு
நிலவேம்பு கஷாயம் டெங்குவுக்கு சரியான மருந்தல்ல. அதை அருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பது கமலின் கருத்து. கமலின் இந்த கருத்தை எதிர்த்து சித்தா ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பல தனிப்பட்ட சித்த மருத்துவர்களும் கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கமல் விளக்கம்
இந்த நிலையில் கமல் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த டுவீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன் அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.
மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்க சொல்லியிருக்கிறேன்.
ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்
சித்தா, அலோபதி என்ற தனி சார்பு எனக்கில்லை. அதுவரை டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்றால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்
இவ்வாறு கமல் கூறினார்.