மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
சாலையில் செல்லும்போது சிலநேரம் விபத்துக்களை உண்டாக்கும் காரணிகள் எதுவும் கண்ணில் பட்டாலும் கூட, நாம் (மட்டும்) பாதுகாப்பாக சென்றால் போதும் என்று தான் பலர் நினைப்பார்கள். ஆனால் இதேபோன்று சமீபத்திய நிகழ்வு ஒன்றில் அப்படி ஒரு விஷயத்தை கவனித்த நடிகை பார்வதி, தான் மட்டுமல்லாது தனக்குப் பின்னால் வருபவர்களின் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்ட சம்பவம் அவருக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சமீபத்தில் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் வந்துகொண்டிருந்தார் பார்வதி. வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு உடனே காரை நிறுத்திய பார்வதி, உடனே போனில் இதுகுறித்த தகவலை மின்சார வாரியத்திற்கு தெரியப்படுத்தினார். அதுமட்டுமல்ல, காரின் அருகே வெளியே நின்றுகொண்டு வாகன ஓட்டிகளை கவனமாக செல்லுமாறு எச்சரிக்கையும் செய்தார். பின் மின்சார ஊழியர்கள் வந்தபின்னரே அந்த இடத்தைவிட்டு கிளம்பினாராம் பார்வதி.