ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களில் தொடர்ந்து இடம்பிடித்து நடித்துவரும் மலையாள குணச்சித்திர நடிகரான அலான்சியர் லே, அரசியல் விஷயங்களில் தனது கருத்தையும், எதிர்ப்பையும் கூட வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்க தயங்காதவர்.
கடந்த ஜனவரி மாதம் பிஜேபி கட்சிக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக காசர்கோடு சென்ற அலான்சியர், அங்கே அமெரிக்க கொடியை கோவணமாக கட்டிக்கொண்டு, ஒரு வேட்டியை மட்டும் உடுத்திக்கொண்டு, மஞ்சப்பையுடன் பஸ் ஏறி அமெரிக்கா போவதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
சமீபத்திலும் கூட வேறொரு விஷயத்திற்காக இன்னொரு வித்தியாசமான எதிர்ப்பை காட்டியுள்ளார் அலான்சியர் லே. பிஜேபியை சேர்ந்த சரோஜ் பாண்டே என்கிற பெண் அரசியல்வாதி, “பிஜேபி நடத்தும் பேரணிகள் பக்கம் குறைசொல்லும் விதமாக பார்வையை திருப்பும சி.பி.எம் கட்சிக்காரர்களின் கண்களை பிடுங்கி எறிந்துவிடுவேன்” என சர்ச்சையாக பேசினார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்த அலான்சியர் லே, தனது கண்களை கட்டிக்கொண்டு தனது பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சரோஜ் பாண்டே மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.